search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பத்திரிகையாளர்"

    பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். #ManekaGandhi #metoo
    புதுடெல்லி:

    மீடூ பிரசாரம் மூலம் பெண்கள் பணியிடங்களில் சந்தித்த பாலியல் தொல்லைகள் வெளியாகி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். 

    இப்போது பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

    “அரசியல் கட்சிகள் உள் விசாரணை குழுவை அமைக்க கோரி அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இங்கு 6 தேசிய கட்சிகள், 90 சிறிய கட்சிகள் உள்ளது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என கூறியுள்ளார்.  #ManekaGandhi #metoo
    கர்நாடகாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த பரசுராம் என்பவரை சிறப்புப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #GauriLankesh
    பெங்களூர்:

    பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது55) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி இரவு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அவரது வீட்டு சிசிடிவி. கேமராவில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. கவுரி லங்கேஷ் கொலை வழக்கை கர்நாடக உளவுப் பிரிவு ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக முக்கிய புள்ளியான மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் பெங்களூர் பஸ் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நவீன ரக துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

    புலனாய்வு குழுவினர் விசாரித்தபோது அவருக்கு நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த வலதுசாரி பங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரின் உருவப்படங்களை போலீசார் வரைந்து வெளியிட்டு தேடி வந்தனர்.

    நவீன்குமார் அளித்த வாக்கு மூலத்தில் கொல்லேகால் காட்டுப் பகுதியில் 4 பேரை காரில் அழைத்து வந்து சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்தார். 4 பேரும் இந்தி பேசும் வாலிபர்கள் என்றும் தெரிவித்தார். அதன் பேரில் சிவமோகாவைச் சேர்ந்த நவீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே போலீஸ் தேடும் கொலையாளிகள் மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் கர்நாடக சிறப்பு படை போலீசார் மும்பை மற்றும் மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மராட்டிய வாலிபர் ஒருவர் சிக்கினார். பரசுராம் வாக்மரே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவருக்கு கொலையில் முக்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். #GauriLankeshmurder
    பாகிஸ்தானில் ராணுவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த காரணத்திற்காக கடத்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் குல் புஹாரி இன்று பத்திரமாக வீடு திரும்பினார். #GulBukhari #BringBackGulBukhari
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் குல் புஹாரி. இவர் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தார். வருகின்ற ஜூலை மாதம் 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவரது கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.

    இந்நிலையில், நேற்று இரவு புஹாரி லாகூர் நகரில் டிவி புரோகிராம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் புஹாரியை கடத்தி சென்றது. அவர்கள் முகத்தில் முகமுடி அணிந்திருந்ததால் யார் என்பது குறித்து தெரியவில்லை என புஹாரியின் கணவர் கூறினார்.

    புஹாரி கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடத்தப்பட்ட சில மணி நேரங்களில் புஹாரி பத்திரமாக வீடு திரும்பினார். அவர் நலமாக இருப்பதாக அவர் கணவர் தெரிவித்தார்.

    கடத்தியவர்களில் ஒருவர் ராணுவ உடை அணிந்திருந்தாக புஹாரி தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து ராணுவத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக புஹாரி பல பிரச்சனைகள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். #GulBukhari #BringBackGulBukhari
    ×